×

திண்டிவனம் அருகே திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய 2 வேன்கள், கார் அடுத்தடுத்து மோதல்


திண்டிவனம், பிப். 8: திண்டிவனம் அருகே திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய 2 வேன் மற்றும் கார் மோதிய விபத்தில் சென்னையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னை கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால் மகன் கருணாகரன் (50). இவர் உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக 2 வேன்களில் திண்டுக்கல்லுக்கு சென்றார். பின்னர் நிகழ்ச்சி முடிந்து மீண்டும் உறவினர்களுடன் அதே வேன்களில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். மணமக்கள் முன்னதாக காரில் சென்ற நிலையில், 2 வேனும் காரின் பின்னால் சென்று கொண்டிருந்தது. நேற்று அதிகாலை 1 மணியளவில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை திண்டிவனம் அருகே கருணாவூர் என்ற இடத்தில் வேன் பழுதாகி சாலையோரம் நின்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்த வேன், பழுதாகி நின்றிருந்த வேன் மீது வேகமாக மோதியது.

இதில் வேனில் இருந்த கருணாகரன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் பலியானவர் உடலை மீட்டு கொண்டிருந்த போது விபத்து ஏற்படுத்திய வேனின் பின்புறம் அவ்வழியே வந்த மற்றொரு கார் அதிவேகமாக வந்து மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திண்டிவனம் போலீசார், உயிரிழந்த கருணாகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்த 4 பேர் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பழுதாகி நின்றிருந்த வேன் மீது மற்றொரு வேன், கார் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Tindivanam ,
× RELATED சென்னை நோக்கி வந்த அரசுப் பேருந்து,...